Friday, April 9, 2010

அ‌‌ஜீத்

அ‌‌ஜீத் ரசிகர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். பா‌ரின் படம் என்றால் ஹாலிவுட் மாதி‌ரி பிற நாட்டுப் படமல்ல. அ‌‌ஜீத்தின் அடுத்தப் படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகிறது.

அ‌ஜீத்தின் ஐம்பதாவது படத்தை கௌதம் இயக்குவதும், கிளவுட் நைன் என்ற நிறுவனம் தயா‌ரிப்பதும் முடிவான விஷயங்கள். துப்பறியும் கதையான இதன் அனைத்துக் காட்சிகளும் வெளிநாடுகளில் படமாகவுள்ளன. இந்தத் தகவலை ஒளிப்பதிவாளர் மனோ‌ஜ் பரமஹம்சா உறுதி செய்துள்ளார். இவர் கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

மனோ‌ஜ் பரமஹம்சாவின் முதல் படம் ஈரம். அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா. படத்துக்குப் படம் ஒளிப்பதிவாளர்களை மாற்றும் கௌதமுக்கு பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் பரம திருப்தி. அதனால் அ‌ஜித்தை வைத்து இயக்கும் தனது அடுத்தப் படத்துக்கும் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார். எடிட்டிங் ஆண்டனி, பாடல்கள் தாமரை என வழக்கமான அதே டீம்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment