Friday, April 9, 2010

பிரிட்டனில் நடைபெறும் பார்முலா -2 கார் பந்தயத்தில் நடிகர் அஜீத்



சென்னை,​​ மார்ச் 25: பிரிட்டனில் இந்த ஆண்டு நடைபெறும் பார்முலா -2 கார் பந்தயத்தில் நடிகர் அஜீத் குமார் கலந்து கொள்கிறார்.


அஜீத் தவிர இந்தியாவில் இருந்து இப்ராஹிம்,​​ பார்தீவ் சுரேஷ்வரன் ஆகியோர் இந்த கார் பந்தயத்தில் பங்கேற்கின்றனர்.


பிரிட்டனின் சில்வர்ஸ்டோனில் உள்ள கார் பந்தய மைதானத்திலஏப்ரல் 16-ம் தேதி பார்முலா 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.


இது குறித்து அவர் கூறியுள்ளது:


பார்முலா 2 பந்தயத்தில் கலந்து கொள்ளும் நாளை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் களம் இறங்குகிறேன். இதற்காக சமீபத்தில் மலேசியா சென்று பயிற்சி மேற்கொண்டேன். இனி பிரிட்டன் சென்று போட்டி நடைபெறும் சில்வர்ஸ்டோனிலும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன் என்று அஜீத் கூறியுள்ளார்.


முன்னதாக கடந்த 2003-ல் அஜீத் குமார் முதல்முறையாக சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்றார். அப்போது பி.எம்.டபிள்யூ. ஆசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அவர் கலந்து கொண்டார்.


கடைசியாக பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப். கார்பந்தயத்தில் அவர் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். ஆனால் காரில் ஏற்பட்ட பழுது காரணமாக பந்தய தூரத்தை அவரால் ஏட்ட முடியவில்லை. அஜீத் குமார் வரும் மே 1-ம் தேதி 40 வயதை எட்டுகிறார். அவருடன் கார் பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு இந்திய வீரர்களும் இளைஞர்கள். இதில் இப்ராஹிமுக்கு 21 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment